ஞாயிறு, 7 நவம்பர், 2010

குயில்தோப்பு

நான் ஓடி ஆடி விளையாண்டபோது
குயில்கள் கூவின...
குயில்தோப்பு என்ற பெயரில்...

அருகில்
நகராயின...
தோப்பு இருந்த இடத்தில்...
வணிக வளாகம்...

குயில்தோப்பு வணிக வளாகம்

திங்கள், 11 அக்டோபர், 2010

பொருளாதார மண்டலம்

நகரத்திற்கு வந்தேன்
மூட்டை தூக்கினேன்
பொருளாதாரம் கிடைத்தது

புறநகர் வந்தேன்
பெட்டிக்கடை வைத்தேன்
பொருளாதாரம் பெருத்தது

கிராமபுரம் வந்தேன்
விவசாயம் செய்தேன்
பொருளாதாரம் நிலைத்தது

பொருளாதார மண்டலம் என்றது அரசு
நிலத்தை எடுத்துக்கொண்டார்கள்

நகரத்திற்கு வந்தேன்
மூட்டை தூக்குகின்றேன்...

---- சாக்கோட்டை மு. இளங்கோவன்

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஊடகங்கள்

எங்கள் ஊரில் மழைப் பெய்தது
வீடுகளில் பாதுகாப்பாய் அடைந்தோம்…
சாலை முழுவதும் மூழ்கிப்போயின…
ஊடகங்கள் சொன்னது…
“வெள்ளக்காடாய் தமிழகம்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு”

உங்கள் ஊரில் மழைப் பெய்தது
இல்லை… இல்லை…
குண்டு மழைப் பெய்தன…
மரத்தடியில்... பதுங்கு குழிக்குள்...
பதுங்கி போனீர்கள்...
ஆமி காரன் அழைத்துச்சென்று அடைத்து வைத்தான்
முள்வேலி முகாம்களில் மூக்கைக் கிழிக்கும்
முடைநாற்றம் வீச...

வீடுகள் முழுவதும் சிங்களவன் குடியேற்றம்...

ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

இந்திய ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

ஒன்றிரண்டு தமிழ் ஊடகங்கள் வாய்திறந்தன...
“தமிழர்கள் பாதுகாப்பான இடத்தில்
பராமரிக்கப்படுகிறார்கள்”
இராச பச்சே அறிவிப்பு...?

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

இன்னும் எத்தனை...

முத்துக்குமரா...
நீ மரணித்தாய்...
எம் இனம் எழுச்சிகொள்ள...
உனை துருப்புச்சீட்டாய் எடுக்கச்சொன்னாய்...

எடுத்தோம்...
அரசியல்வாதியை நம்பாதே என்றாய்
நம்பாமல் இருந்தோம்
அரசியல்வாதியும் உனைத் தூக்கிச் சென்றார்கள்

தமிழகம்
தமிழர்கள்
எழுச்சி கொள்ளாமல் மிக கவனமாய்...
மிக சாதுர்யமாய்...
உனைத் தூக்கியே முடக்கிப்போட்டார்கள்.

எம் இனம் எழ
இன்னும் எத்தனை...
தாளமுத்து... நடராசன்... முத்துக்குமரன்...

பிணம் தின்னும் கழுகுகள் இருக்கும் வரை...
பிணத்தைக் காட்டி வாக்குகள் மட்டும் போதும் அவர்களுக்கு


மாற்றை யோசிக்கும் மாற்றம் வந்தால்...
நிச்சயமாய் இனம் எழும்...
இல்லையென்றால்
ஒட்டுமொத்தமாய் ஒழிந்தே போகட்டும்...


தமிழன் என்றொரு இனம் இருந்ததாய் வரலாறு கூட மறைக்கட்டும்...

செவ்வாய், 29 ஜூன், 2010

சாதியை ஒழித்து

சாதியை ஒழித்து தமிழராய் சேர
ஒன்றாய் வாருங்கள்
சாதியை மறந்து ஒன்றாய் சேர்வது
ஏய்ப்பது தானுங்க - நல்லா
ஏய்ப்பது தானுங்க

சாதியை ஒழித்து ஒன்றாய் சேர்ந்தால்
சமத்துவம் வந்திடுங்க
மறந்த சாதியை உசுப்பிவிட்டால்
மறுபடி வந்திடுங்க - சாதி
மீண்டும் வந்திடுங்க

படிக்கும்போது சாதி கேட்பதாய்
பதரும் தோழர்களே
மறுத்த உரிமையை மீட்டெடுக்க
கேட்பது தவறாங்க - சாதி
கேட்பது தவறாங்க

திருமணம் என்றால் சாதியில் தேடும்
சிந்தனை ஏனுங்க
சாதியை மறுத்து திருமணம் செய்தால்
குடியா முழுகிவிடும் - உங்க
உயிரா மாய்ந்துவிடும்

சட்டம்போட்டு சாதியை ஒழிக்கும்
அரசு இல்லீங்க
சாதியை வைத்தே அரசியல் நடத்தும்
கட்சி தானுங்க - உங்களை
ஆளும் கட்சிங்க

ஆட்சி மாறி அடுத்தவர் வந்தால்
அவரும் அப்படிதான்
சாதி இருந்தால் தேர்தலின்போது
பிரிப்பது எளிதுங்க அதனால்
வெல்வதும் எளிதுங்க

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

இலங்கை போர்க்குற்றத்தைவிசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழுதமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...

மேலும் பார்க்கஇலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும்குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில்நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர்,தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில்பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும்இடம்பெற்றுள்ளனர்.

http://www.un.org/news/ossg/hilites.htm

.
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகபோர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பிவைப்போம்.ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன்கேட்டுகொள்கிறேன்.மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களைதெரியபடுத்தவும்

சனி, 19 ஜூன், 2010

தமிழினம் காப்பார்...

மன்மோகன் அலுவலகத்தில்
அடுக்க முடியாத கடிதங்கள்...
காலையில் ஒன்றும் கடும்பகல் ஒன்றும்
மாலையில் ஒன்றும் மயக்கும் இரவினில் ஒன்றும்...
விடிய விடிய ஒன்றுமாய்...

தமிழர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியக் கடிதங்கள்
மன்மோகன் அதை
படித்துப்படித்தே இந்தியாவையே ஆளுகின்றார்,

எழுதிய கைக்கு எத்தனை கணையாழிப் போட்டாலும் தகும்.

கடிதத்தின் வரலாறு தெரியாதவர்கள்
புலம்பித்தீர்க்கின்றனர்

இந்தியாவின் வரலாற்றை
கடிதம் மூலமே மகளுக்குச் சொன்ன வரலாறு உண்டு
தம்பிக்கு கடிதம் எழுதிய அண்ணாவை
தமிழினமே திரும்பிப்பாத்தது.

அண்ணா இன்று உயிரோடிருந்தால்...
கடிதம் எழுதுவதையே நிறுத்தியிருப்பார்...

எஸ் எம் எஸ் ம் இமெயிலும்
தொலைபேசியும் கைப்பேசியும்
பேக்சும் இருக்கையில்...
கடிதத்தின் மூலமே
சாதனை படைத்திடும் மக்களின் ''தலைவன்''

மகனுக்கோ மகளுக்கோ பதவியென்றால்...
கடிதம் எழுதி சங்கடப்படுத்தாமல்
கடுகி விரைந்து நேரில் சென்று
''மெதுவாகப்பேசி'' வாங்கிவருவார்.

சுற்றுச்சூழல் ஆர்வளர்களே...
நீங்கள் தயவுசெய்து போராடாதீர்கள்...
மரங்கள் அழிகின்றன என்று
எம்மினத்தின் அவலங்களை
இந்தியாவிற்கு தெரியப்படுத்த
இன்னும் காகிதங்கள் தேவைப்படும்.

தமிழகத்தின் கடைசி மரத்திலிருந்து
மரக்கூழ் தயாரானப்பின்பும்
கடிதம் எழுதக்காகிதம் தேவைப்படும்
அயல்நாட்டிலிருந்தும்
மரங்கள் வாங்கி காகிதம் தயாரித்து...
கடிதம் எழுதுவார்...
கண்டிப்பாய் வெல்வார்...
கண்டிப்பாய் தமிழினம் காப்பார்...

(எனது நண்பரும் கலைஞரின் பற்றாளருமான ஒருவரின் சில திருத்தங்களுடன் இந்த வரிகள் - நன்றி)

வியாழன், 3 ஜூன், 2010

இவர்கள் யார்?

எங்களுக்கு எப்போது
தடையில்லா மின்சாரம் கிடைக்கும்?
எங்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன்...
விரைவில் ஆவன செய்வதாய் உறுதியளித்தார்.

ஒருநாள் காலை
நிலங்களை அளவையிட
அதிகாரிகள் வந்தனர்...
விசாரித்துப்பார்த்தேன்.

சிறப்புப்பொருளாதார மண்டலம்
வரப்போகிறது என்றார்கள்...

அப்படியென்றால்....?

தடையில்லா மின்சாரம் வரும்...
தடையில்லா குடிநீர் கிடைக்கும்...
தொழிற்ச்சாலைகள் வரும்...
வேலைவாய்ப்புகள் பெருகும்...
பகுதி முழுவதும் வளமாகும்...

சரி

மக்கள் என்ன ஆவார்கள்...?
நிலங்கள் என்ன ஆகும்...?

மக்கள் வெளியேற்றப்படுவார்கள்
முறையிட்டால்...
போராடினால்...
சிறைவாழ்க்கை

நிலங்கள்...
அன்னிய நிறுவனங்களுக்கு
தாரைவார்க்கப்படும்...

வேலைவாய்ப்பு...
தற்காலிக
பணிப்பயிற்சி வேலை என்று
அடிமாட்டு விலைக்கு
கூலிகளாய் எடுப்பார்கள்

ஊதிய உயர்வோ
தொழிலாளர் சட்டத்தையோ காட்டி
சலுகைகளோ கேட்டால்...
இந்த பருப்பு இங்கே வேகாது என்பார்கள்...

எங்கள் மண்ணின் பூர்வீகத்தைப்பிடுங்கி
அன்னிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்க
இவர்கள் யார்?

சனி, 15 மே, 2010

இந்தியா சொல்லும்...

சிங்கள குண்டுகளால் நிரப்பப்பட்ட
ஈழத் தமிழச்சிகளின் கர்ப்பப்பை
சித்திரவதை முகாமில்...
தனிமைச் சிறையில்...
நிறைமாத கர்ப்பிணிகள்!
கவலைப்படாதீர்கள்...
இந்தியா சொல்லும்...
ஓரினச் சேர்க்கையால் கர்ப்பமென்று...!

சனி, 17 ஏப்ரல், 2010

அவமானம்

அதிகார நானேற்றி
சட்டமே வில்லாய்க் கொண்டு
உத்தரவென்னும் அம்பெய்யும்
அரசாலும் "வில்'லன்களே...

அதிகார நாணறுந்தால்...
சட்டமே மதிப்பிழந்தால்...
உத்தரவிட்டென்ன பயன்
அரசாலும் நீங்களெல்லாம்
அவமானப்படுவீர்கள்...

வியாழன், 18 மார்ச், 2010

அவாள் வீட்டுப் பெண்களை

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்த
ஆழமான முள்ளை
எப்பாடு பட்டாவது எடுத்தே தீருவோம்...
சட்ட மன்றத்தில்
சாதனை(?) முதல்வரின்
முத்தான அறிவிப்பு..
சட்டமானது...
சட்டத்தில் மட்டுமே யானது...
இன்றுவரை
அவாள் மட்டுமே அர்ச்சகர்...

சிதம்பரம் கோயிலில்
தேவாரம் பாடிய
ஆறுமுகசாமியும் ஓதுவார்களும்
அவாளால் அடித்து உதைத்து சித்திரவதை...
சட்டத்தில் மட்டும்
தமிழிழும் அர்ச்சனை செய்யலாம்...
நிஜத்தில் மட்டும்
தமிழில் செய்தால் அடி உதை...

தமிழில் பாடினால்
புனிதம்(?) கெட்டுவிடும்...
கடவுள் தீட்டாகும்...

காஞ்சிபுரம் தேவனாதன்
அனைத்து சாதிப்பெண்களையும்
கருவறையில் அழைத்து
ஆலிங்கணம் செய்யலாம்

கருவறையில் நுழைவதற்கு
கருவடைய வாய்ப்புள்ள
அனைத்துச்சாதிப்பெண்களுக்கும் தடையில்லை...

ஆன்மீகவாதிகளே...
ஆன்மீகத்தை வைத்துக்கொண்டே
சாதியத்தை தகர்ப்பதாய்ச் சொல்லும்...
முற்போக்கு? வாதிகளே...
அவாள் வீட்டுப் பெண்களை
அர்ச்சகராக்குங்கள்...
ஆதிதிராவிடர் வீட்டு
அழகிய நம்பிகளும்
கருவறையில் நுழையலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்திட்ட
முள்ளினை வேருடன் பிடுங்களாம்...

ஓமந்தூரார் தோட்டத்தில்

பார்ப்பனனின் அடிவருடி சோழர்கள்
உலகே வியக்கும்
உயர்ந்த கோபுரங்கள் கட்டினர்...

வடவர்க்கு வரிவசூல் செய்வதற்கும்...
கங்காணி பார்ப்பதற்கும்...
ஓமந்தூரார் தோட்டத்தில்
ஒய்யாரமாய் கட்டிடம்...
தமிழகத்தின் தலை(?) மகனின்
தலைசிறந்த கட்டிடம்.

கட்டிடங்கள் கட்டிட
கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு...
ஈழத்தமிழனின் எலும்புகள் கிடைத்தன...
கட்டிடங்கள் எழுந்தன
எழிலான தோற்றத்திற்கு
அழகான கண்ணாடிகள் தேவைப்பட்டன...
ஈழத்தமிழனின் கண்களை அடுக்கினால்....
கட்டாயம் அந்த
இடத்தை நிரப்பிடும்.

ஈழப்பெண்களை
பாலியல் வண் புணர்ந்த...
இறந்தபின்னும்
பாலியல் உறவுகொள்ளத்துடித்த...
சிங்களச் சிப்பாய்க்கு
ஆயுதம் கொடுத்து...
ஆயுதம் கொடுத்து...
அணுகுண்டும் வேதிக்குண்டும் வாரிக்கொடுத்து...
கொடுத்து... கொடுத்து...
சிவந்த கரத்தினால்...
மன்மோகனின் ”உயர்ந்த”கரத்தினால்...
நாடா வெட்டி கோலாகலத்திறப்பு.

உழைத்த உழைப்பாளிகளின்
உள்ளமெலாம் குளிர்ந்திட...
ஈழத்தமிழர்களின் சதைகளை
பதம்பார்க்க
சிங்களவனுக்கு உதவிய ”நம்தலைவர்”
கடா வெட்டி
விருந்து வைத்த்தாய்
நினைத்திருந்தோம்
இல்லை... இல்லை...
ஈழத்தமிழனை
ஒட்டுமொத்தமாய் கொன்றொழித்து...
அந்தக்கறியை
பக்குவமாய் பாதுகாத்து...
பார்புகழ விருந்திட்டார்...

தமிழர்களே...
படம்வைத்து பாராட்டுவதை
எதிர்கட்சியினர்
எள்ளி நகையாடுகின்றனர்.

தமிழர்களே...
தயங்காமல் செய்யுங்கள்...
உலகத் தமிழர்கே தலைவராய்(?) இருக்கின்ற
கலைஞருக்கு...
அவரே...
தள்ளாத
எதையுமே தள்ளாத(?) வயதிலே...
வாயிலில்
முழுஉருவச்சிலை வையுங்கள்...
எதிர்காலச் சந்ததி
காரி உமிழ இடம் வேண்டும்...
கட்டாயம் அதற்கும் தொட்டி வையுங்கள்...

காவிகளைப் பார்த்தால்

காவிகளைப் பார்த்தால்
கவனம் தேவை
நிச்சயமாய் அது
கழிசடையாய் இருக்கும்,

காவிகளின் எண்ணத்தில்
பச்சை பச்சையாய்...
நீலப்படங்களின் உறைவிடமாய்...

பிரேமானந்தா...
செயேந்திரா...
நித்தியானந்தா...
இன்னும் எத்தனையோ...

காவிகளில்கூட
வர்ண பேதம் உண்டு
அவாள் என்றால்
அரசும் அடக்கி வாசிக்கும்
ஊடகங்கள் ஊமையாய் பேசும்
மற்றவரென்றால்
ஊதிப்பெரிதாக்கும்.

செயேந்திரன்...
சொர்ணமால்யா...
சுசீலா...
காம லீலைகள்...
மறைக்கப்பட்டன
கொலை வழக்குமட்டும்
பெரிதாக்கி...
அதுவும் புசுவாணமாக்கி...

நித்தியானந்தா
மடங்கள் சூறை...
படங்கள் கிழிபட்டன...
சிலைகள் உடைபட்டன...
செய்தது இந்து அமைப்புகள்.

காஞ்சிபுரம் கருவறையில்
தேவநாதன் காமலீலைகள்
உல்லாச சல்லாபம்...
இந்து அமைப்புகள்
எங்கே ஒளி(ழி)ந்தன,

புனிதங்கள் அவாளுக்கு
சிதம்பர நந்திகள்
விலகி வழிகாட்டும்...
மற்றவருக்கோ...
சிதையேறி மீண்டும்
புனிதராய் வரவேண்டும்...
சிதையில் சிதைந்தாலோ...
சிறையிலேயே வாழ்க்கை
பிரேமானந்தாவைப்போல்...