புதன், 11 மே, 2011

விலைமகன்


ஒன்றுதான்
மாடும் மனிதனும் ஒன்றுதான்

உங்கள் குணங்களை
மாட்டுக்கும் ஏன் பழக்குகின்றீர்கள்

வரதட்சனை பெற்று
நீங்கள் இனவிருத்தி செய்தது போதும்

காசுக்காய்
இனவிருத்தி செய்துவிட்டு களைப்படையும் எருதிற்கும்
வரதட்சனைக்கே குடும்பம் நடத்திடும் மனிதனுக்கும்
வித்தியாசம் என்ன?

ஒன்றுதான்
விலைமகளும் மணமகனும்
இருவருமே காசுக்காய் படுக்கை விரிப்பர்

சனி, 7 மே, 2011

கையில் சுமப்பது பாரமா?

கால் கடுக்க
நடந்து வந்த கணவன் சொன்னான்
இந்த 'சனி'யனை நடக்கச் சொல்

இதைத்தானே
பத்து மாதம் வயிற்றில் சுமந்தேன்
கையில் சுமப்பது பாரமா?

வாழ்க அன்னையர்

அன்னையர் தினம்

சோறு இருந்த பானையைப்பார்த்தாள்....

அடியில் அகப்பட்டது அகப்பையில் பாதி...

எண்ணிப்பார்த்தாள் ஆளுக்கு ஐந்து கவளம்

பள்ளிக்கு சென்ற மகன் பசியில் வருவான்...

இரவு பசித்தாங்க மாட்டான்...

வளரும் பிள்ளை பசியுடன் இருக்கக்கூடாது...

பத்து கவளத்தையும் அவனுக்கே தந்தாள்

வயிற்றை நிரப்ப வழியில்லை

இருந்ததைத்தந்து ஈரத்துணியால்

தன்வயிற்றைத் தடவிக்கொண்டாள்

தன் பசி தெரியவில்லை

மகன் பசி போக்க

நாளை வேலைக்குப் போய்

கூலி வாங்கி...

ஒரு உருவாய் அரிசி வாங்கி...

வாழ்க அன்னையர் தினம்