ஒன்றுதான்
மாடும் மனிதனும் ஒன்றுதான்
உங்கள் குணங்களை
மாட்டுக்கும் ஏன் பழக்குகின்றீர்கள்
வரதட்சனை பெற்று
நீங்கள் இனவிருத்தி செய்தது போதும்
காசுக்காய்
இனவிருத்தி செய்துவிட்டு களைப்படையும் எருதிற்கும்
வரதட்சனைக்கே குடும்பம் நடத்திடும் மனிதனுக்கும்
வித்தியாசம் என்ன?
ஒன்றுதான்
விலைமகளும் மணமகனும்
இருவருமே காசுக்காய் படுக்கை விரிப்பர்