வியாழன், 18 மார்ச், 2010

அவாள் வீட்டுப் பெண்களை

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்த
ஆழமான முள்ளை
எப்பாடு பட்டாவது எடுத்தே தீருவோம்...
சட்ட மன்றத்தில்
சாதனை(?) முதல்வரின்
முத்தான அறிவிப்பு..
சட்டமானது...
சட்டத்தில் மட்டுமே யானது...
இன்றுவரை
அவாள் மட்டுமே அர்ச்சகர்...

சிதம்பரம் கோயிலில்
தேவாரம் பாடிய
ஆறுமுகசாமியும் ஓதுவார்களும்
அவாளால் அடித்து உதைத்து சித்திரவதை...
சட்டத்தில் மட்டும்
தமிழிழும் அர்ச்சனை செய்யலாம்...
நிஜத்தில் மட்டும்
தமிழில் செய்தால் அடி உதை...

தமிழில் பாடினால்
புனிதம்(?) கெட்டுவிடும்...
கடவுள் தீட்டாகும்...

காஞ்சிபுரம் தேவனாதன்
அனைத்து சாதிப்பெண்களையும்
கருவறையில் அழைத்து
ஆலிங்கணம் செய்யலாம்

கருவறையில் நுழைவதற்கு
கருவடைய வாய்ப்புள்ள
அனைத்துச்சாதிப்பெண்களுக்கும் தடையில்லை...

ஆன்மீகவாதிகளே...
ஆன்மீகத்தை வைத்துக்கொண்டே
சாதியத்தை தகர்ப்பதாய்ச் சொல்லும்...
முற்போக்கு? வாதிகளே...
அவாள் வீட்டுப் பெண்களை
அர்ச்சகராக்குங்கள்...
ஆதிதிராவிடர் வீட்டு
அழகிய நம்பிகளும்
கருவறையில் நுழையலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்திட்ட
முள்ளினை வேருடன் பிடுங்களாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக