சனி, 2 ஜூலை, 2011
கருவுறாத....
புதன், 11 மே, 2011
விலைமகன்
சனி, 7 மே, 2011
கையில் சுமப்பது பாரமா?
அன்னையர் தினம்
சோறு இருந்த பானையைப்பார்த்தாள்....
அடியில் அகப்பட்டது அகப்பையில் பாதி...
எண்ணிப்பார்த்தாள் ஆளுக்கு ஐந்து கவளம்
பள்ளிக்கு சென்ற மகன் பசியில் வருவான்...
இரவு பசித்தாங்க மாட்டான்...
வளரும் பிள்ளை பசியுடன் இருக்கக்கூடாது...
பத்து கவளத்தையும் அவனுக்கே தந்தாள்
வயிற்றை நிரப்ப வழியில்லை
இருந்ததைத்தந்து ஈரத்துணியால்
தன்வயிற்றைத் தடவிக்கொண்டாள்
தன் பசி தெரியவில்லை
மகன் பசி போக்க
நாளை வேலைக்குப் போய்
கூலி வாங்கி...
ஒரு உருவாய் அரிசி வாங்கி...
வாழ்க அன்னையர் தினம்
வியாழன், 24 மார்ச், 2011
கச்சிதமாய் முடிப்போம்
இலவசங்கள் தருவதற்கு
வீதிதோறும் சாராயக்கடைகள்
எங்கள் வளர்ச்சிக்கு
ஸ்பெக்ட்ரம் போல சில வகை
கோடிகளுக்கு மேல்
சொல் உண்டென்றால்
அதிலும் செய்வோம் ஊழல்
போதைக்கு
அனைத்து போதைக்கும்..
அடிமையான உங்களுக்கு
சுய நினைவு வருவதற்குள்
எங்கள் வேலை கச்சிதமாய் முடிப்போம்
அருகதையுண்டா
லஞ்சம் வாங்கியே
பழக்கப்பட்டவர்கள்
தங்கள் நாற்காலிக்காய்
இலவசங்கள் அறிவிப்பு
இலவசங்கள் பெற்று அனுபவிக்கும்
உங்களுக்கு
இலஞ்சம்பற்றி பேச அருகதையுண்டா
என்றைக்கும்?
அவன் செயல்
எல்லாம் அவன் செயல்
ஊழலும் லஞ்சமும் அவன் செயல்
எல்லாம் அவன் செயல்
கற்பழிப்பும் கொலையும் அவன் செயல்
காலம்
அன்று...
வாழைப்பூ மடலெடுத்து
வகையாக காலில் கட்டி
மூடணி அணிந்ததாக
மிடுக்காய் நடந்தேன்
நுனா காயை பறித்துவந்து
நூதனமாய் தேர்வடித்து
பூவரசன் இலைஎடுத்து
பீபீயும் நான்செய்தேன்
கிட்டிப்புல் விளையாடி
கீற்று வீட்டின்கூறையிலே
தெனாவெட்டாய் மறைந்த புல்லை
கோலெடுத்து நான் எடுப்பேன்...
இன்று...
பத்துக்கு பத்துஅறைக்குக்குள்ளே
செயற்கையாய் குளிரூட்டி
கணினித்திரையில் விளையாட்டு
கிரிக்கெட்டும் ஸ்டார் வாரும்
உடலசையா விளையாட்டு
விரல் மட்டும் விளையாடும்.
வாக்களிப்பீர் எங்களுக்கே...
வண்ணத்தொலைக்காட்சி
வளி அடுப்பு
வந்தது உங்கள் வீட்டுக்கு எப்படி?
வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகள்
கிரைண்டர் வேண்டுமா.. மிக்ஸிவேண்டுமா..
நிச்சயம் தருவோம்
சொன்னதைச் செய்வோம்
சொல்லாததையும் செய்வோம்...
கோயில் இல்லாத ஊரில்
குடியிருக்கவேண்டாம்
சொன்னார்கள் அன்று...
மதுக்கடை இல்லாத வீதியில்
குடியிருக்கவேண்டாம்
வரும் ஆட்சியில்...
சொல்லாமல் செய்வோம்
வாக்களிப்பீர் எங்களுக்கே...
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
சாதியின் வகைக்காண...
சனி, 8 ஜனவரி, 2011
ஊர் நாறும்
வழலை தேடி அழைகின்ற மனிதா...
உன் மலத்தை...
ஊர் மலத்தை...
முழுகி முத்தெடுக்கும் கடல் தொழிலாளிபோல்
மனமொப்பி செய்கின்றவனை...
ஊர்கோடியில்...
ஒதுக்குபுறமாய்...
தேனீர்கடையில் தனிக்குவளை தந்து...
யோசித்துப்பார்...
அவனைபுறந்தள்ளினால்....
அவன் உன்னை புறந்தள்ளினால்...
ஊர் நாறும்
உன் வீடும் நாறும்.
புதன், 5 ஜனவரி, 2011
சேவல் கத்தின..
அன்று
காலை வேலையில்
சேவல் கூவின...
இன்று
உணவுத்தேவைக்காய்
கறிக்கோழி வளர்ப்பு
கூவாது... மேயாது....
நின்ற இடத்தில்
கிடைத்ததை முழுங்கி
நிறைந்து(நிறைத்து) வளர்ந்தன
கொழுத்து வளர்ந்தன
காலையில் எழுவதற்கு
செல்பேசியில்...
செயற்கைக் கோழி
சேவலாய் கத்தின.
