செவ்வாய், 29 ஜூன், 2010

சாதியை ஒழித்து

சாதியை ஒழித்து தமிழராய் சேர
ஒன்றாய் வாருங்கள்
சாதியை மறந்து ஒன்றாய் சேர்வது
ஏய்ப்பது தானுங்க - நல்லா
ஏய்ப்பது தானுங்க

சாதியை ஒழித்து ஒன்றாய் சேர்ந்தால்
சமத்துவம் வந்திடுங்க
மறந்த சாதியை உசுப்பிவிட்டால்
மறுபடி வந்திடுங்க - சாதி
மீண்டும் வந்திடுங்க

படிக்கும்போது சாதி கேட்பதாய்
பதரும் தோழர்களே
மறுத்த உரிமையை மீட்டெடுக்க
கேட்பது தவறாங்க - சாதி
கேட்பது தவறாங்க

திருமணம் என்றால் சாதியில் தேடும்
சிந்தனை ஏனுங்க
சாதியை மறுத்து திருமணம் செய்தால்
குடியா முழுகிவிடும் - உங்க
உயிரா மாய்ந்துவிடும்

சட்டம்போட்டு சாதியை ஒழிக்கும்
அரசு இல்லீங்க
சாதியை வைத்தே அரசியல் நடத்தும்
கட்சி தானுங்க - உங்களை
ஆளும் கட்சிங்க

ஆட்சி மாறி அடுத்தவர் வந்தால்
அவரும் அப்படிதான்
சாதி இருந்தால் தேர்தலின்போது
பிரிப்பது எளிதுங்க அதனால்
வெல்வதும் எளிதுங்க

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

இலங்கை போர்க்குற்றத்தைவிசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழுதமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...

மேலும் பார்க்கஇலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும்குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில்நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர்,தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில்பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும்இடம்பெற்றுள்ளனர்.

http://www.un.org/news/ossg/hilites.htm

.
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகபோர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பிவைப்போம்.ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன்கேட்டுகொள்கிறேன்.மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களைதெரியபடுத்தவும்

சனி, 19 ஜூன், 2010

தமிழினம் காப்பார்...

மன்மோகன் அலுவலகத்தில்
அடுக்க முடியாத கடிதங்கள்...
காலையில் ஒன்றும் கடும்பகல் ஒன்றும்
மாலையில் ஒன்றும் மயக்கும் இரவினில் ஒன்றும்...
விடிய விடிய ஒன்றுமாய்...

தமிழர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியக் கடிதங்கள்
மன்மோகன் அதை
படித்துப்படித்தே இந்தியாவையே ஆளுகின்றார்,

எழுதிய கைக்கு எத்தனை கணையாழிப் போட்டாலும் தகும்.

கடிதத்தின் வரலாறு தெரியாதவர்கள்
புலம்பித்தீர்க்கின்றனர்

இந்தியாவின் வரலாற்றை
கடிதம் மூலமே மகளுக்குச் சொன்ன வரலாறு உண்டு
தம்பிக்கு கடிதம் எழுதிய அண்ணாவை
தமிழினமே திரும்பிப்பாத்தது.

அண்ணா இன்று உயிரோடிருந்தால்...
கடிதம் எழுதுவதையே நிறுத்தியிருப்பார்...

எஸ் எம் எஸ் ம் இமெயிலும்
தொலைபேசியும் கைப்பேசியும்
பேக்சும் இருக்கையில்...
கடிதத்தின் மூலமே
சாதனை படைத்திடும் மக்களின் ''தலைவன்''

மகனுக்கோ மகளுக்கோ பதவியென்றால்...
கடிதம் எழுதி சங்கடப்படுத்தாமல்
கடுகி விரைந்து நேரில் சென்று
''மெதுவாகப்பேசி'' வாங்கிவருவார்.

சுற்றுச்சூழல் ஆர்வளர்களே...
நீங்கள் தயவுசெய்து போராடாதீர்கள்...
மரங்கள் அழிகின்றன என்று
எம்மினத்தின் அவலங்களை
இந்தியாவிற்கு தெரியப்படுத்த
இன்னும் காகிதங்கள் தேவைப்படும்.

தமிழகத்தின் கடைசி மரத்திலிருந்து
மரக்கூழ் தயாரானப்பின்பும்
கடிதம் எழுதக்காகிதம் தேவைப்படும்
அயல்நாட்டிலிருந்தும்
மரங்கள் வாங்கி காகிதம் தயாரித்து...
கடிதம் எழுதுவார்...
கண்டிப்பாய் வெல்வார்...
கண்டிப்பாய் தமிழினம் காப்பார்...

(எனது நண்பரும் கலைஞரின் பற்றாளருமான ஒருவரின் சில திருத்தங்களுடன் இந்த வரிகள் - நன்றி)

வியாழன், 3 ஜூன், 2010

இவர்கள் யார்?

எங்களுக்கு எப்போது
தடையில்லா மின்சாரம் கிடைக்கும்?
எங்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன்...
விரைவில் ஆவன செய்வதாய் உறுதியளித்தார்.

ஒருநாள் காலை
நிலங்களை அளவையிட
அதிகாரிகள் வந்தனர்...
விசாரித்துப்பார்த்தேன்.

சிறப்புப்பொருளாதார மண்டலம்
வரப்போகிறது என்றார்கள்...

அப்படியென்றால்....?

தடையில்லா மின்சாரம் வரும்...
தடையில்லா குடிநீர் கிடைக்கும்...
தொழிற்ச்சாலைகள் வரும்...
வேலைவாய்ப்புகள் பெருகும்...
பகுதி முழுவதும் வளமாகும்...

சரி

மக்கள் என்ன ஆவார்கள்...?
நிலங்கள் என்ன ஆகும்...?

மக்கள் வெளியேற்றப்படுவார்கள்
முறையிட்டால்...
போராடினால்...
சிறைவாழ்க்கை

நிலங்கள்...
அன்னிய நிறுவனங்களுக்கு
தாரைவார்க்கப்படும்...

வேலைவாய்ப்பு...
தற்காலிக
பணிப்பயிற்சி வேலை என்று
அடிமாட்டு விலைக்கு
கூலிகளாய் எடுப்பார்கள்

ஊதிய உயர்வோ
தொழிலாளர் சட்டத்தையோ காட்டி
சலுகைகளோ கேட்டால்...
இந்த பருப்பு இங்கே வேகாது என்பார்கள்...

எங்கள் மண்ணின் பூர்வீகத்தைப்பிடுங்கி
அன்னிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்க
இவர்கள் யார்?