பார்ப்பனனின் அடிவருடி சோழர்கள்
உலகே வியக்கும்
உயர்ந்த கோபுரங்கள் கட்டினர்...
வடவர்க்கு வரிவசூல் செய்வதற்கும்...
கங்காணி பார்ப்பதற்கும்...
ஓமந்தூரார் தோட்டத்தில்
ஒய்யாரமாய் கட்டிடம்...
தமிழகத்தின் தலை(?) மகனின்
தலைசிறந்த கட்டிடம்.
கட்டிடங்கள் கட்டிட
கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு...
ஈழத்தமிழனின் எலும்புகள் கிடைத்தன...
கட்டிடங்கள் எழுந்தன
எழிலான தோற்றத்திற்கு
அழகான கண்ணாடிகள் தேவைப்பட்டன...
ஈழத்தமிழனின் கண்களை அடுக்கினால்....
கட்டாயம் அந்த
இடத்தை நிரப்பிடும்.
ஈழப்பெண்களை
பாலியல் வண் புணர்ந்த...
இறந்தபின்னும்
பாலியல் உறவுகொள்ளத்துடித்த...
சிங்களச் சிப்பாய்க்கு
ஆயுதம் கொடுத்து...
ஆயுதம் கொடுத்து...
அணுகுண்டும் வேதிக்குண்டும் வாரிக்கொடுத்து...
கொடுத்து... கொடுத்து...
சிவந்த கரத்தினால்...
மன்மோகனின் ”உயர்ந்த”கரத்தினால்...
நாடா வெட்டி கோலாகலத்திறப்பு.
உழைத்த உழைப்பாளிகளின்
உள்ளமெலாம் குளிர்ந்திட...
ஈழத்தமிழர்களின் சதைகளை
பதம்பார்க்க
சிங்களவனுக்கு உதவிய ”நம்தலைவர்”
கடா வெட்டி
விருந்து வைத்த்தாய்
நினைத்திருந்தோம்
இல்லை... இல்லை...
ஈழத்தமிழனை
ஒட்டுமொத்தமாய் கொன்றொழித்து...
அந்தக்கறியை
பக்குவமாய் பாதுகாத்து...
பார்புகழ விருந்திட்டார்...
தமிழர்களே...
படம்வைத்து பாராட்டுவதை
எதிர்கட்சியினர்
எள்ளி நகையாடுகின்றனர்.
தமிழர்களே...
தயங்காமல் செய்யுங்கள்...
உலகத் தமிழர்கே தலைவராய்(?) இருக்கின்ற
கலைஞருக்கு...
அவரே...
தள்ளாத
எதையுமே தள்ளாத(?) வயதிலே...
வாயிலில்
முழுஉருவச்சிலை வையுங்கள்...
எதிர்காலச் சந்ததி
காரி உமிழ இடம் வேண்டும்...
கட்டாயம் அதற்கும் தொட்டி வையுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக