புதன், 4 நவம்பர், 2015

இறைவனுக்கே

போட்டுக் கிழிந்ததை விட
பார்த்தும் அலமாறியில் அடுக்கியும்
கிழிந்ததுதான் அதிகம்.


இல்லாதவர்கள் கிழிந்தாலும் தைத்துப்போடுகிறார்கள்
இருப்பவர்கள் பித்தான் பிய்ந்ததற்க்கே
புத்தாடை எடுக்கின்றார்கள்.

ஆண்டுதோறும் வரும் பிறந்த நாளுக்கொன்று
பிறந்த நட்சத்திரத்திற்க்கொன்று
கோயிலுக்குப்போய் வழிபட்டு வர ஒன்று
புத்தாடை எடுப்பதற்கென்றே
புதிது புதிதாய் காரணங்கள்.
இன்னும் சிலரோ
மகிழ்ச்சியைக் கொண்டாட என்கின்றனர்.
இதுவா மகிழ்ச்சி

ஈதல் மகிழ்ச்சி
இல்லாதவர்க்கு ஈதல் மகிழ்ச்சி
நிறைய செய்கின்றேனே....
இன்னும் செய்தால் என்ன?
இல்லாதவர்களை இல்லாமல் ஆக்கிவிட்டு
மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்
மனம் நிறைவாய் கொண்டாடுங்கள்.

இல்லாதவர்களுக்கு இறைவன் தருவான்...
இறைவனுக்கே இல்லாதவனும் தந்தால்தான்.,

ஞாயிறு, 1 நவம்பர், 2015

விதண்டாவாதம்


தங்கத்தில் ஆபரணங்கள்
ஐம்பொன் சிலைகள்
களவு போகாமல் இருக்க
கெட்டியான பூட்டு.
பக்தன் தருகின்ற
காணிக்கைக் காசுகளை
கள்வன்அபகரிக்காமலிருக்க
திண்டுக்கல் பூட்டு
கோயிலை பராமரிக்கும்
பக்தனுக்கும் தெரியும்
கோயிலில் இருக்கின்ற
சிலைகள் கல் தானென்று.
கல்லுக்கு இவைகளைக்
காக்கும் சக்தி இல்லையென்றும்
தனக்கான பொருளை
தன்னால் காக்க முடியாதென்றும்
உன்னை எப்படி
காக்குமென்றும் கேட்டால்
விதண்டாவாதம் வேண்டாமென்பான்.

சனி, 31 அக்டோபர், 2015

கடவுள் நம்பிக்கை

நான்கு சக்கரத்திலும்
எழுமிச்சை பழத்தினை வைத்து
வழிவிடு விநாயகனை
வணங்கி செல்கின்ற
ஓட்டுனருக்கு
வாகனத்தில்
''பிரேக்'' இருக்கின்ற
நம்பிக்கையே
கடவுளை நம்பவில்லை
என்பதால்தான்