வியாழன், 18 மார்ச், 2010

காவிகளைப் பார்த்தால்

காவிகளைப் பார்த்தால்
கவனம் தேவை
நிச்சயமாய் அது
கழிசடையாய் இருக்கும்,

காவிகளின் எண்ணத்தில்
பச்சை பச்சையாய்...
நீலப்படங்களின் உறைவிடமாய்...

பிரேமானந்தா...
செயேந்திரா...
நித்தியானந்தா...
இன்னும் எத்தனையோ...

காவிகளில்கூட
வர்ண பேதம் உண்டு
அவாள் என்றால்
அரசும் அடக்கி வாசிக்கும்
ஊடகங்கள் ஊமையாய் பேசும்
மற்றவரென்றால்
ஊதிப்பெரிதாக்கும்.

செயேந்திரன்...
சொர்ணமால்யா...
சுசீலா...
காம லீலைகள்...
மறைக்கப்பட்டன
கொலை வழக்குமட்டும்
பெரிதாக்கி...
அதுவும் புசுவாணமாக்கி...

நித்தியானந்தா
மடங்கள் சூறை...
படங்கள் கிழிபட்டன...
சிலைகள் உடைபட்டன...
செய்தது இந்து அமைப்புகள்.

காஞ்சிபுரம் கருவறையில்
தேவநாதன் காமலீலைகள்
உல்லாச சல்லாபம்...
இந்து அமைப்புகள்
எங்கே ஒளி(ழி)ந்தன,

புனிதங்கள் அவாளுக்கு
சிதம்பர நந்திகள்
விலகி வழிகாட்டும்...
மற்றவருக்கோ...
சிதையேறி மீண்டும்
புனிதராய் வரவேண்டும்...
சிதையில் சிதைந்தாலோ...
சிறையிலேயே வாழ்க்கை
பிரேமானந்தாவைப்போல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக