வியாழன், 16 செப்டம்பர், 2010

ஊடகங்கள்

எங்கள் ஊரில் மழைப் பெய்தது
வீடுகளில் பாதுகாப்பாய் அடைந்தோம்…
சாலை முழுவதும் மூழ்கிப்போயின…
ஊடகங்கள் சொன்னது…
“வெள்ளக்காடாய் தமிழகம்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு”

உங்கள் ஊரில் மழைப் பெய்தது
இல்லை… இல்லை…
குண்டு மழைப் பெய்தன…
மரத்தடியில்... பதுங்கு குழிக்குள்...
பதுங்கி போனீர்கள்...
ஆமி காரன் அழைத்துச்சென்று அடைத்து வைத்தான்
முள்வேலி முகாம்களில் மூக்கைக் கிழிக்கும்
முடைநாற்றம் வீச...

வீடுகள் முழுவதும் சிங்களவன் குடியேற்றம்...

ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

இந்திய ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

ஒன்றிரண்டு தமிழ் ஊடகங்கள் வாய்திறந்தன...
“தமிழர்கள் பாதுகாப்பான இடத்தில்
பராமரிக்கப்படுகிறார்கள்”
இராச பச்சே அறிவிப்பு...?

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

இன்னும் எத்தனை...

முத்துக்குமரா...
நீ மரணித்தாய்...
எம் இனம் எழுச்சிகொள்ள...
உனை துருப்புச்சீட்டாய் எடுக்கச்சொன்னாய்...

எடுத்தோம்...
அரசியல்வாதியை நம்பாதே என்றாய்
நம்பாமல் இருந்தோம்
அரசியல்வாதியும் உனைத் தூக்கிச் சென்றார்கள்

தமிழகம்
தமிழர்கள்
எழுச்சி கொள்ளாமல் மிக கவனமாய்...
மிக சாதுர்யமாய்...
உனைத் தூக்கியே முடக்கிப்போட்டார்கள்.

எம் இனம் எழ
இன்னும் எத்தனை...
தாளமுத்து... நடராசன்... முத்துக்குமரன்...

பிணம் தின்னும் கழுகுகள் இருக்கும் வரை...
பிணத்தைக் காட்டி வாக்குகள் மட்டும் போதும் அவர்களுக்கு


மாற்றை யோசிக்கும் மாற்றம் வந்தால்...
நிச்சயமாய் இனம் எழும்...
இல்லையென்றால்
ஒட்டுமொத்தமாய் ஒழிந்தே போகட்டும்...


தமிழன் என்றொரு இனம் இருந்ததாய் வரலாறு கூட மறைக்கட்டும்...