சோறு இருந்த பானையைப்பார்த்தாள்....
அடியில் அகப்பட்டது அகப்பையில் பாதி...
எண்ணிப்பார்த்தாள் ஆளுக்கு ஐந்து கவளம்
பள்ளிக்கு சென்ற மகன் பசியில் வருவான்...
இரவு பசித்தாங்க மாட்டான்...
வளரும் பிள்ளை பசியுடன் இருக்கக்கூடாது...
பத்து கவளத்தையும் அவனுக்கே தந்தாள்
வயிற்றை நிரப்ப வழியில்லை
இருந்ததைத்தந்து ஈரத்துணியால்
தன்வயிற்றைத் தடவிக்கொண்டாள்
தன் பசி தெரியவில்லை
மகன் பசி போக்க
நாளை வேலைக்குப் போய்
கூலி வாங்கி...
ஒரு உருவாய் அரிசி வாங்கி...
வாழ்க அன்னையர் தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக