சனி, 8 ஜனவரி, 2011

ஊர் நாறும்

தன் மலத்தை கழுவியதற்கே
வழலை தேடி அழைகின்ற மனிதா...

உன் மலத்தை...
ஊர் மலத்தை...
முழுகி முத்தெடுக்கும் கடல் தொழிலாளிபோல்
மனமொப்பி செய்கின்றவனை...

ஊர்கோடியில்...
ஒதுக்குபுறமாய்...
தேனீர்கடையில் தனிக்குவளை தந்து...

யோசித்துப்பார்...
அவனைபுறந்தள்ளினால்....

அவன் உன்னை புறந்தள்ளினால்...

ஊர் நாறும்
உன் வீடும் நாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக