புதன், 11 மே, 2011

விலைமகன்


ஒன்றுதான்
மாடும் மனிதனும் ஒன்றுதான்

உங்கள் குணங்களை
மாட்டுக்கும் ஏன் பழக்குகின்றீர்கள்

வரதட்சனை பெற்று
நீங்கள் இனவிருத்தி செய்தது போதும்

காசுக்காய்
இனவிருத்தி செய்துவிட்டு களைப்படையும் எருதிற்கும்
வரதட்சனைக்கே குடும்பம் நடத்திடும் மனிதனுக்கும்
வித்தியாசம் என்ன?

ஒன்றுதான்
விலைமகளும் மணமகனும்
இருவருமே காசுக்காய் படுக்கை விரிப்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக