ஞாயிறு, 1 நவம்பர், 2015

விதண்டாவாதம்


தங்கத்தில் ஆபரணங்கள்
ஐம்பொன் சிலைகள்
களவு போகாமல் இருக்க
கெட்டியான பூட்டு.
பக்தன் தருகின்ற
காணிக்கைக் காசுகளை
கள்வன்அபகரிக்காமலிருக்க
திண்டுக்கல் பூட்டு
கோயிலை பராமரிக்கும்
பக்தனுக்கும் தெரியும்
கோயிலில் இருக்கின்ற
சிலைகள் கல் தானென்று.
கல்லுக்கு இவைகளைக்
காக்கும் சக்தி இல்லையென்றும்
தனக்கான பொருளை
தன்னால் காக்க முடியாதென்றும்
உன்னை எப்படி
காக்குமென்றும் கேட்டால்
விதண்டாவாதம் வேண்டாமென்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக