புதன், 4 நவம்பர், 2015

இறைவனுக்கே

போட்டுக் கிழிந்ததை விட
பார்த்தும் அலமாறியில் அடுக்கியும்
கிழிந்ததுதான் அதிகம்.


இல்லாதவர்கள் கிழிந்தாலும் தைத்துப்போடுகிறார்கள்
இருப்பவர்கள் பித்தான் பிய்ந்ததற்க்கே
புத்தாடை எடுக்கின்றார்கள்.

ஆண்டுதோறும் வரும் பிறந்த நாளுக்கொன்று
பிறந்த நட்சத்திரத்திற்க்கொன்று
கோயிலுக்குப்போய் வழிபட்டு வர ஒன்று
புத்தாடை எடுப்பதற்கென்றே
புதிது புதிதாய் காரணங்கள்.
இன்னும் சிலரோ
மகிழ்ச்சியைக் கொண்டாட என்கின்றனர்.
இதுவா மகிழ்ச்சி

ஈதல் மகிழ்ச்சி
இல்லாதவர்க்கு ஈதல் மகிழ்ச்சி
நிறைய செய்கின்றேனே....
இன்னும் செய்தால் என்ன?
இல்லாதவர்களை இல்லாமல் ஆக்கிவிட்டு
மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்
மனம் நிறைவாய் கொண்டாடுங்கள்.

இல்லாதவர்களுக்கு இறைவன் தருவான்...
இறைவனுக்கே இல்லாதவனும் தந்தால்தான்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக