முத்துக்குமரா...
நீ மரணித்தாய்...
எம் இனம் எழுச்சிகொள்ள...
உனை துருப்புச்சீட்டாய் எடுக்கச்சொன்னாய்...
எடுத்தோம்...
அரசியல்வாதியை நம்பாதே என்றாய்
நம்பாமல் இருந்தோம்
அரசியல்வாதியும் உனைத் தூக்கிச் சென்றார்கள்
தமிழகம்
தமிழர்கள்
எழுச்சி கொள்ளாமல் மிக கவனமாய்...
மிக சாதுர்யமாய்...
உனைத் தூக்கியே முடக்கிப்போட்டார்கள்.
எம் இனம் எழ
இன்னும் எத்தனை...
தாளமுத்து... நடராசன்... முத்துக்குமரன்...
பிணம் தின்னும் கழுகுகள் இருக்கும் வரை...
பிணத்தைக் காட்டி வாக்குகள் மட்டும் போதும் அவர்களுக்கு
மாற்றை யோசிக்கும் மாற்றம் வந்தால்...
நிச்சயமாய் இனம் எழும்...
இல்லையென்றால்
ஒட்டுமொத்தமாய் ஒழிந்தே போகட்டும்...
தமிழன் என்றொரு இனம் இருந்ததாய் வரலாறு கூட மறைக்கட்டும்...
1 கருத்து:
meendum endru ezhum en tamilanin veeram
கருத்துரையிடுக